மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் காலா. நிலம் எங்கள் உரிமை என உரக்க சொன்னது இப்படம். எட்டு வழிச்சாலைக்கு விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தி வரும் வேலைகளை செய்து வருகின்றன. இந்நிலையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், மத்திய பிரதமர் அலுவலகமும், சட்ட அமைச்சகமும் இணைந்து நாட்டில் உள்ள மாஜிஸ்திரேட்கள் முதல் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரை அனைவரும் காலா படத்தை பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். நிலம் இல்லாதவர்களின் துயரத்தை நீதிபதிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்படி கேட்டுக் கொண்டுள்ளேன் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுமா? இல்லையா? என்பது தெரியவில்லை.