ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அரவிந்த்சாமி, த்ரிஷா நடித்துள்ள படம் சதுரங்க வேட்டை-2. என்.வி.நிர்மல்குமார் இயக்கி உள்ளார். மனோபாலா தயாரித்துள்ளார். இந்தப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்ட நிலையிலும் படம் இன்னும் வெளியாகவில்லை. அரவிந்த்சாமிக்கு சம்பள பாக்கி இருப்பதால் அவர் டப்பிங் பேசவில்லை என்றும், அதனால் படம் தாமதமாவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் அரவிந்தசாமி சென்னை ஐகோர்ட்டில் தயாரிப்பாளர் மனோபாலா மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "சதுரங்க வேட்டை 2" படத்தில் நடித்தற்காக தயாரிப்பாளர் மனோபாலா ஒரு கோடியே 79 லட்சம் சம்பள பாக்கி வைத்துள்ளார். அதை வட்டியுடன் தர உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார். வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட ஐகோர்ட், விசாரணையை வருகிற 20ந் தேதிக்கு ஒத்தி வைத்தது. அரவிந்த்சாமி சம்பள பாக்கிக்காக வழக்கு தொடர்ந்திருந்தாலும் படத்தை தடை செய்ய கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
"அரவிந்த்சாமிக்கு ஒரு கோடி சம்பள பாக்கி இருப்பது உண்மை தான். அவர் டப்பிங் பேசி முடித்துக் கொடுத்தால் பட வெளியீட்டுக்கு முன்பே சம்பள பாக்கியை கொடுத்து விடுவேன். அதற்கு அவர் ஒப்புக் கொண்டு தான் இருந்தார். இப்போது யாரோ சிலரின் தூண்டுதலின் பேரில் கோர்ட்டுக்கு சென்றுள்ளார். கோர்ட்டில் என் தரப்பு விளக்கத்தை கொடுப்பேன்" என்கிறார் மனோபாலா.