ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தீரன் அதிகாரம் ஒன்று படத்தை தொடர்ந்து 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' நிறுவனம் மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வரும் 'NGK' படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.
செல்வராகவன் இயக்கும் இந்த இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' நிறுவனம் அடுத்து தயாரிக்கும் ஒரு படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் ஜோதிகா கதாநாயகியாக நடிக்கிறார்.
அறிமுக இயக்குனர் எஸ்.ராஜ் இயக்குகிறார். இவர் திருடன் போலீஸ், உள்குத்து படங்களை இயக்கிய கார்த்திக் ராஜுவிடம் உதவியாளராக இருந்தவர். அதோடு, அனுஷ்கா நடித்த பாகமதி படத்திலும் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.
அந்தப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தமிழில் வெளியிட்டது. அந்த அறிமுகத்தில் தான் ஜோதிகாவிடம் கதை சொல்லும் வாய்ப்பைப் பெற்றாராம். ரீ-என்ட்ரியில் புதுமுக இயக்குநர் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் படம் இது தான்.
இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்குகிறது. '36 வயதினிலே', 'மகளிர் மட்டும்', படங்களை அடுத்து ராதாமோகன் இயக்கத்தில் 'காற்றின் மொழி' படத்தில் நடித்துள்ளார் ஜோதிகா. ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 18-ஆம் தேதி காற்றின் மொழி வெளியாகிறது.