ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ராஜமவுலி இயக்கத்தில், நானி, சுதீப், சமந்தா நடித்து வெளியான படம் நான் ஈ. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்திற்கு பிறகு ராஜமவுலி இயக்கிய படங்களில் இடம்பெறவில்லை சமந்தா. ஆனபோதும், தற்போது ஜூனியர் என்டிஆர், ராம்சரணை வைத்து அவர் இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் சமந்தா நடிப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இதுகுறித்து சமந்தா அளித்துள்ள ஒரு பேட்டியில், ராஜமவுலி இயக்கத்தில் மீண்டும் நடிக்க வேண்டும் என்கிற ஆசை உள்ளது. அவர், இதுவரை என்னை அணுகவில்லை. அது மனதளவில் சோகத்தை அளித்துள்ளது.
ஆனபோதும் ராஜமவுலி படத்தில் நடிப்பதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் வதந்திகள் தான். அதை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார் சமந்தா.