ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சர்கார்'. கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில், முதலமைச்சர் வேடத்தில் நடிக்கும் பழ.கருப்பையாவின் மகளாக நடித்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.
'சர்கார்' படப்பிடிப்பு கடந்த 2-ம் தேதி நிறைவடைந்தது. பிரபல கல்லூரியில் நடைபெற்ற கடைசிநாள் படப்பிடிப்பில் வரலட்சுமி பங்கேற்று நடித்தார். படப்பிடிப்பு முடிவந்த அடுத்தநாளே, டப்பிங் பேசத் தொடங்கினார் வரலட்சுமி.
இரண்டே நாட்களில் தான் பேச வேண்டிய காட்சிகளுக்கான டப்பிங்கை பேசி முடித்துவிட்டார். இந்த தகவலை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் வரலட்சுமி.
“சர்கார் டப்பிங் முடிந்தது. உங்களுடன் பணியாற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி. நான் இதுவரை பணியாற்றியதிலேயே மிகவும் அழகான, இனிமையான இயக்குநர் நீங்கள் தான். எப்போதுமே அமைதியாக இருக்கும் குணம் கொண்டவர். இந்தப் பயணத்தில் நானும் ஒரு அங்கமாக இருந்ததில் மகிழ்ச்சி” என பதிவிட்டுள்ள வரலட்சுமி சரத்குமார், ஏ.ஆர்.முருகதாஸுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.