ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகியாக வளர்ந்து இருக்கும் அமலா பால், அடுத்து ஜெயம் ரவியுடன் ஜோடி போட இருக்கிறார். அமீர் இயக்கும் ஆதி பகவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி பூலோகம் என்ற படத்திலும், அடுத்து சமுத்திரகனி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறார். இதில் சமுத்திரகனி இயக்கும் படத்தில் தான் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அமலாபால் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. படத்தின் கதையை அமலாபாலிடமும் டைரக்டர் சொல்லிவிட்டார். அவருக்கும் கதை பிடித்து போய்விட்டதாம்.
இதுகுறித்து டைரக்டர் சமுத்திரகனி கூறுகையில், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழியிலும் இப்படம் உருவாக இருக்கிறது. இதனால் இரண்டு மொழியிலும் பிரபலமான நடிகையை நடிக்க வைக்க எண்ணினோம். இன்றைய சூழலில் அமலாபால் தான் அதற்கு பொருத்தமானவர். இரண்டு மொழியிலும் அவர் பிரபலம் என்பதால் அவரை அணுகியிருக்கிறோம். கதையும் அவருக்கு பிடித்து விட்டது. இருந்தாலும் அமலா பால் நடிப்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. சம்பளம், கால்ஷீட் உள்ளிட்ட சில பிரச்னைகள் இருக்கிறது. அது எல்லாம் ஓ.கே.ஆக வேண்டி இருக்கிறது. ஒரு வார காலத்திற்குள் எல்லாம் உறுதி செய்யப்பட்டு விடும் என்றார்.