அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி, யோகிபாபு நடித்துள்ள படம் சீமராஜா. பொன்ராம் இயக்கி உள்ள இந்தப் படத்தை 24ஏம் நிறுவனத்தின் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார்.
தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் "நான் தயாரித்துள்ள சீமராஜா படம் வருகிற 13ந் தேதி வெளிவருகிறது. பெரிய முதலீட்டில் இந்தப் படத்தை தயாரித்துள்ளேன். இந்தப் படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட முயற்சி நடக்கிறது. சுமார் 3500 நிறுவனங்கள் வெளியிடலாம் என்று சொல்கிறார்கள். அப்படி வெளியானால் எனக்கு பெரிய நஷ்டம் ஏற்படும். எனவே எனது படத்தை இணைய தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம். சீமராஜா படத்தை இணைய தளத்தில் வெளியிட தடைவிதித்தது.