மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
முன்பெல்லாம் திரைப்படங்கள் நூறு நாட்களுக்கு மேலாக ஓடும். சமீபகாலமாக ஒரு வாரம் இரண்டு வாரம் ஓடுவதென்பதே அரிதாகி விட்டது. திருட்டு விசிடிக்கள் மற்றும் இணைய தளங்களில் புதிய படங்கள் உடனடியாக வெளியாகி விடுவதால், ஓரிரு வாரங்களில் படங்களை திரையிட்டு, போட்ட பணத்தை எடுத்தாக வேண்டிய கட்டாய சூழலும் தயாரிப்பாளர்களுக்கு உருவாகியிருக்கிறது.
இதன்காரணமாக, சினிமாத் தொழில் நலிவடைந்து வருவதாகவும், சினிமா படிப்படியாக அழிந்து விடும் என்றும் சிலர் விரக்தியில் பேசுகிறார்கள். ஆனால் இதுபற்றி தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கூறுகையில், சினிமாவை யாராலும் அழிக்க முடியாது. ஆங்காங்கே தியேட்டர்களை இடித்து விட்டு மால் கட்டுவதாக சொல்கிறார்கள்.
ஆனால், ஒரு தியேட்டரை இடித்தால் அதே இடத்தில் நான்கு தியேட்டர்கள் வருகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் பார்க்கையில் இந்த ஆண்டில் மட்டும் புதிதாக 160 புதிய ஸ்கிரீன் உருவாகியிருக்கிறது. ஆக, சினிமா இப்போது தான் நன்றாக உள்ளது. நாளுக்கு நாள் இது வளருமே தவிர, யாராலும் அழிக்க முடியாது என்கிறார் தேனப்பன்.