ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பெங்காலி நடிகையாக இருந்து தொட்டாசினுங்கி படத்தின் மூலம் தமிழ் நடிகை ஆனவர் தேவயானி. கிளாமர் இல்லாத குடும்ப பாங்கான கேரக்டர்கள் மூலம் ரசிகர்களையும், பெண்களையும் கவர்ந்தவர். தனது கணவர் ராஜகுமாரன் இயக்கிய திருமதி தமிழ் படம் தான் கடைசியாக அவர் ஹீரோயினாக நடித்தது. அதில் ராஜகுமாரன் ஜோடியாகவே நடித்தார். அதற்கு முன்பே அக்கா, அண்ணி, கேரக்டரில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
தற்போது களவாணி மாப்பிள்ளை படத்தின் மூலம் மாமியாராகியிருக்கிறார். படத்தில் அவர் தினேஷின் மாமியாராகவும், அதிதி மேனனின் தாயாகவும் நடித்துள்ளார். இதனை பழம்பெரும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மணிவாசகத்தின் மகன் காந்தி மணிவாசகம் இயக்கி உள்ளார். சரவணன் அபிமன்யூ ஒளிப்பதிவு செய்துள்ளார். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். படம் பற்றி காந்தி மணிவாசகம் கூறியதாவது:
என் அப்பா மணிவாசகம் ஒரு பார்முலா வைத்திருப்பார். மெலிதான ஒரு கதையில் நிறைய கமர்ஷியல் ,நிறைய காமெடி வைத்திருப்பார். அதன் படி அவர் இயக்கிய எல்லா படங்களுமே கமர்சியல் வெற்றி பெற்றது. அதைத் தான் நானும் தொட்டிருக்கிறேன். பக்கா பேமிலி சப்ஜெக்டுடன் காமெடியை மிக்ஸ் செய்திருக்கிறேன். வழக்கமாக மாமியார் மருமகள் கதைகள் தான் சினிமாவில் வந்திருக்கிறது, ஜெயித்திருக்கிறது. மாமியார், மருமகன் கதைகள் அத்தி பூத்தாற்போல் வரும். அமோக வெற்றி பெறும். அப்படித் தான் இது உருவாக்கப்பட்டிருக்கிறது.