ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த 35 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வருபவர் இயக்குநர் மணிரத்னம். இந்திய அளவில் உள்ள முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இவர், தற்போது செக்கச்சிவந்த வானம் என்ற மல்டி ஹீரோ கதையை இயக்கியிருக்கிறார். அரவிந்த் சாமி, சிம்பு, விஜயசேதுபதி, அருண்விஜய், பிரகாஷ்ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா ஹரப்பா என பலர் நடித்துள்ளனர்.
மணிரத்னம் இயக்கிய படங்களில் நாயகன் குறிப்பிடத்தக்க படமாகும். கமல்ஹாசன் நடித்த இந்த படம் மும்பையை பின்னணியாக கொண்ட கதையில் தாதாயிசத்தை மையமாகக் கொண்டு உருவாகியிருந்தது.
சமீபகாலமாக அதிலிருந்து மாறுபட்ட கதைகளாக இயக்கி வந்த மணிரத்னம், நீண்ட இடைவேளைக்குப்பிறகு தற்போது இயக்கியுள்ள செக்கச்சிவந்த வானம் படத்தையும் தாதாயிசத்தை மையப்படுத்தி இயக்கியிருக்கிறார். இதில் முக்கிய தாதாவாக பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார்.
இந்த படத்தின் ஆடியோ விழாவில் பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், மணிரத்னம், 1987ல் இயக்கிய நாயகன் இன்று வரை இந்திய சினிமாவில் ஒரு சிறந்த படமாக கருதப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த செக்கச்சிவந்த வானம் படமும் நாயகன் படத்தை திரும்பிப்பார்ப்பது போல் உருவாகியுள்ளது என்று சொன்னார்.