சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
வி ஸ்டுடியோஸ் சார்பில் விஜி சுப்ரமணியன் தயாரிப்பில், மேயாத மான இயக்குநர் ரத்ன குமார் இயக்கும் படம் "ஆடை". அமலாபால் முதன்மை ரோலில் நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. போஸ்டரிலேயே வித்தியாசமாக, அதேசமயம் கொஞ்சம் கிளாமராகவும் இருக்கிறார் அமலாபால்.
இப்படம் குறித்து அமலாபால் கூறியதாவது : "ஆடை" படம் ஒரு சாதாரண கதையல்ல, சாதாரண படமும் அல்ல. இது மாதிரியான உணர்ச்சிகரமான கதைகளும், படங்களும் நடிகைகளின் திறமையை மேம்படுத்த ஊக்கம் அளிக்கிறது. இதில் நான் ஏற்று நடிக்கும் காமினி என்ற சிக்கலான கதாபாத்திரம் என்னையும், என்னை சுற்றியுள்ளவர்களது ஆதங்கத்தையும், நடுக்கங்களையும் வெளிப்படுத்தும். ரத்னகுமார் ஆடை கதையை சொன்ன விதம் என்னை பெரிதும் கவர்ந்ததுடன், மிகவும் பாதித்தது. அவ்வளவு உணர்ச்சிகரமான கதை என்கிறார்.