சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
2010-ம் ஆண்டில் தமிழ், இந்தி, ஆங்கிலம் என்று உலகம் முழுக்க பிஸியாக இருந்த ஏ.ஆர்.ரஹ்மான, கடந்த ஆண்டு துவக்கத்திலேயே அதாவது 2011ம் ஆண்டில் சற்று ஓய்வு எடுக்க போவதாக கூறியிருந்தார். இதனால் கடந்த ஆண்டில் தமிழிலும் சரி, பிறமொழியிலும் சரி எந்த படத்திற்கும் அவ்வளவாக ஏ.ஆர்.ரஹ்மான் கமிட் ஆகவில்லை. இந்நிலையில் 2012ம் ஆண்டு துவக்கம் முதலே பல்வேறு படங்களுக்கு இசையமைக்க ஒத்துக்கொண்டுள்ளார். தமிழில் மட்டும் கிட்டத்தட்ட 6 படங்களுக்கு இசையமைக்க இருக்கிறார். அதில் முதல்படம் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கோச்சடையான், அப்புறம் கவுதம் இயக்கத்தில், விஜய் நடிக்க இருக்கும் யோஹன் அத்தியாயம் ஒன்று, மணிரத்னத்தின் கடல், தனுஷூக்கு ஒரு படம், ஷங்கருக்கு ஒரு படம் என இந்தாண்டு முழுக்க முழுக்க டைட் ஷெடூலில் இருக்கிறார்.
இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளதாவது, கடந்த ஆண்டில் கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது. அதனால் தமிழ் படங்களுக்கு இசையமைக்கவில்லை. மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை. ஆனால் இந்தாண்டு ரசிகர்களின் ரசனையை ஈடு செய்யும் வகையில் பாடல்களை நிச்சயம் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.