ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படத்தில் அறிமுகமானவர் நரேன். அப்பா வேடங்கள் மட்டுமின்றி போலீஸ் வேடங்களிலும் அதிகமாக நடித்து வருகிறார். அதேப்போல் தற்போது பவன்குமார் இயக்கத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள யுடர்ன் படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ஆடுகளம் நரேன்.
இந்தப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகியிருப்பதால் தமிழ் பதிப்புக்கான காட்சியை எடுத்து முடித்ததும் அதே ஸ்பாட்டில் தெலுங்கு பதிப்பையும் படமாக்கியிருக்கிறார் இயக்குனர். ஆனால் ஆடுகளம் நரேனுக்கு தெலுங்கு தெரியாது என்பதால் தெலுங்கு வசனங்களை பேச தடுமாறியிருக்கிறார்.
அப்போது அவருடன் அதே படத்தில் இன்னொரு போலீஸ் அதிகாரியாக இணைந்து நடித்துள்ள ஆதி, நரேனுக்கு தெலுங்கு டயலாக்குகளை புரிய வைத்ததோடு, தைரியமா பேசுங்க சார் என்று உற்சாகம் கொடுத்து வந்திருக்கிறார். இப்படி கூறும் நரேன், யுடர்ன் படத்திற்கு பிறகு தமிழைப்போலவே தெலுங்கு படங்களில் நடிக்கவும் தனக்கு அதிகப்படியான வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக சொல்கிறார்.