ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் 'என்.ஜி.கே.'. நந்த கோபாலன் குமரன் என்பதன் சுருக்கமாக 'என்.ஜி.கே' என பெயர் சூட்டப்பட்டுள்ள இப்படத்தில் ரகுல் ப்ரீத்சிங், சாய் பல்லவி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
இந்தப் படத்துக்கு ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் பைனான்ஸ் செய்துள்ளது. தீபாவளிக்கு இந்தப்படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த நேரத்தில் படப்பிடிப்பு முடியாமல்போனதால், தீபாவளிக்கு ரிலீஸாக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
'தீபாவளிக்குப் பிறகு 'என்.ஜி.கே.' வெளியாகும்' என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்தார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு. அதன் தொடர்ச்சியாக, ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு டுவிட்டரில் பதிவிட்டார் செல்வராகவன்.
அதில், நண்பர்களே படம் தாமதத்துக்கு வருந்துகிறோம். அனைவரும் கடுமயைாக உழைத்தோம். சில விஷயங்கள் எங்களின் கை மீறி நடந்து விட்டன. நல்ல படத்தை கொடுக்க முன்பை விட கடுமைக்க உழைக்க போகிறோம். எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்
இது ஒரு பக்கம் இருக்க, 'என்.ஜி.கே. படத்தின் தாமதத்துக்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகளை குறிப்பிட்ட ஒரு ஸ்டுடியோவில் நடத்த எழுந்த சில பிரச்னைகளும் படம் தாமதத்திற்கு காரணம் என்கிறார்கள்.