ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மரகதநாணயம் படம் வெற்றி பெற்றபோதும் அதையடுத்து தமிழில் படங்கள் கிடைக்காத நிலையில், தெலுங்கிற்கு சென்று நடித்து வந்தார் ஆதி. வில்லன், கேரக்டர் என்று மாறுபட்ட வேடங்களில் நடித்து வந்த அவர், சமந்தாவுடன் நடித்த ரங்கஸ்தலம் வெற்றி பெற்றது.
அதையடுத்து இப்போது சமந்தா லீடு ரோலில் நடித்துள்ள யுடர்ன் படத்திலும் முக்கிய போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
இதுபற்றி ஆதி கூறுகையில், சமந்தாவுடன் இணைந்து நடித்த ரங்கஸ்தலம் எனக்கு தெலுங்கில் நல்ல பெயரை வாங்கித்தந்தது. அதேபோல் இந்த யுடர்ன் படமும் நல்ல பெயரை வாங்கித்தரும் என்று எதிர்பார்க்கிறேன்.
இதன்பிறகு தமிழில் கூடுதல் கவனம் செலுத்தப்போகிறேன். தற்போது நான் மூன்று தமிழ்ப்படங்களில் கமிட்டாகியிருக்கிறேன். அதனால் மீண்டும் தமிழில் எனது ஹீரோ பயணம் தொடரப்போகிறது என்கிறார் ஆதி.