அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
திருமணத்திற்கு பிறகும் தமிழ், தெலுங்கு சினிமாவின் வெற்றி நாயகியாக வலம் வருகிறார் சமந்தா. இவரது நடிப்பில் செப்., 13ம் தேதி சீமராஜா மற்றும் யுடர்ன் படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளன.
சினிமாவில் பிஸியாக நடித்தாலும் சமந்தா சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். பிரதியுஷா என்ற பெயரில் அறக்கட்டளை துவங்கி உதவி வருகிறார். குறிப்பாக இதய நோயால் பாதித்த குழந்தைகளின் ஆபரேஷனுக்கு உதவி வருகிறார்.
இந்நிலையில் சென்னை வந்திருந்த நடிகை சமந்தா, திருவல்லிக்கேணியில் உள்ள ஜாம்பஜார் மார்க்கெட்டிற்கு சென்று அங்கு ஒரு கடையில் அமர்ந்து காயற்கறி விற்பனை செய்தார். சமந்தா காய்கறி விற்பனை செய்வதை அறிந்து ஏராளமானபேர் அங்கு கூடி விட்டனர். சிறிது நேரத்திலேயே கடையில் இருந்த மொத்த காய்கறிகளும் விற்று தீர்ந்தன. இதில் கிடைத்த பணத்தை ஏழை மக்களுக்கு கொடுக்கிறார் சமந்தா.