ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். திருவள்ளூர் மாவட்டம் கோணேட்டம்பேட்டையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துக் கொடுத்துள்ளார். இதன் திறப்பு விழா நடந்தது. விழாவில் கலந்து கொண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஊருக்கு அர்பணித்துவிட்டு பேசியதாவது:
நான் இந்த மண்ணில் பிறந்தவன். எத்தனை நாடுகளுக்கு சென்றாலும், எவ்வளவு புகழ் உச்சிக்கு சென்றாலும் இந்த கிராமத்திற்கு வரும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை. இந்த கிராமத்திற்கு நான் செய்த காரியங்கள் ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. இங்குள்ள ஒவ்வொரு தெருவுக்கும் 2 கழிவறைகளை கட்டி தர விரும்பினேன். ஆனால் அதை விட முக்கியம் கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் நான் படித்த தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு குடிநீரும், கழிவறை வசதியும் ஏற்படுத்தி தருவது மிக முக்கியம் என்று முடிவு செய்து அதனை நிறைவேற்றியிருக்கிறேன்.
நாம் தண்ணீரை வீணாக்கக்கூடாது. தற்போது இரு மாநிலங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற சமயங்களில் தண்ணீரை எப்படி சேமிப்பது என்று யாருக்கும் தெரியவில்லை. நான் இங்கு அரசியல் பேச வரவில்லை என்றாலும் மனதில் பட்டதை சொல்கிறேன். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆந்திராகாரர் அவர் ஏன் இங்கு இந்த காரியங்களை செய்ய வேண்டும் என்று சிலர் நினைக்கலாம். அவர்களுக்கு நான் சொல்கிறேன். நான் ஆந்திராகாரனும் இல்லை, தமிழ்நாட்டுக்காரனும் இல்லை. இந்த உலகத்தை சேர்ந்தவன்.
இவ்வாறு அவர் பேசினார்.