ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 19-ம் தேதி நடைபெறுவதால் அன்றைய தினம் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து நடிகர் சங்கம் தெரிவித்திருப்பதாவது : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம், 2018 ஆகஸ்ட் 19-ம் தேதி ஞாயிறு அன்று சென்னையில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நடிகர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமும் அன்றைய தினம், நடிகர் - நடிகைகள் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வசதியாக சென்னை நகரில் மட்டும் படப்பிடிப்புகள் ரத்து செய்து விடுமுறை அளித்துள்ளது.