ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கமல் நடித்த 'விஸ்வரூபம்-2' படம் வெளியாகிவிட்ட நிலையில் அவருடைய அடுத்தப்படம் என்ன என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுவது இயல்பு தான். அதற்கு விடையளிக்கும் வகையில், தன்னுடைய அடுத்தப்படம் 'இந்தியன்-2' என்றும், அதன் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் என்றும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் அறிவித்துவிட்டார் கமல்.
சுமார் 50 சதவீத படப்பிடிப்புடன் நின்றுபோன 'சபாஷ் நாயுடு' படத்தைப் பற்றி கமல் வாய் திறக்கவில்லை. அதுமட்டுமல்ல, கமல் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தலைவன் இருக்கின்றான், மர்மயோகி படங்கள் பற்றியும் புதிய தகவல் இல்லை. ஆக இந்த இரண்டு படங்கள் மீண்டும் தொடங்கப்பட வாய்ப்பில்லை என்பதை கமல் உணர்த்திவிட்டார்.
இந்தப்படங்களை கிடப்பில் போட்டுவிட்டு இந்தியன் 2 படத்தில் நடிக்க கமல் விரும்பியது ஏன்?
கமல்ஹாசனின் அரசியல் பயணத்துக்கு உதவும் வகையில் அப்படத்தின் கதைக் களம் இருப்பதால், மக்கள் நீதி மையம் கட்சிக்கு ப்ளஸ்ஸாக இருக்கும் என்ற கணக்குப்போட்டே இந்தியன்-2 படத்துக்கு கமல் முன்னுரிமை கொடுத்திருக்கிறாராம்.
ஷங்கரின் '2.0' படம் நவம்பர் 29-ம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது அதன் இறுதிகட்டப் பணிகளில் தீவிரமாக இருக்கிறார் ஷங்கர். செப்டம்பருக்குள் அந்த வேலைகளை முடித்துவிட்டு அக்டோபரில் 'இந்தியன்-2' படப்பிடிப்புக்கு ஷங்கர் தயாராகிவிடுவாராம்.