பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
சமீபத்தில் மலை குகைக்கு சாகச சுற்றுலா சென்ற தாய்லாந்து கால்பந்து விளையாட்டு வீரர்கள் திடீர் மழை வெள்ளத்தால் குகையில் மாட்டிக் கொண்டனர். பல நாள் போராட்டத்துக்கு பிறகு அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தை மையமாக வைத்து தமிழ் படம் ஒன்று தயாராக இருக்கிறது. உரு மற்றும் எழுமின் படத்தை தயாரித்த வி.பி.விஜி, தனது வையம் மீடியா சார்பில் இந்தப் படத்தை தயாரித்து இயக்குகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
தாய்லாந்து குகைக்குள் 17 பேர் மாட்டிக் கொண்டதும், யாருக்கும் தீங்கு இல்லாமல் அவர்கள் மீட்டதும் உலகையே உற்றுப் பார்க்க வைத்தது. இந்த சம்பவம் பல விஷயங்களை கற்றுத் தந்திருக்கிறது. அதனால் அதை மையமாக வைத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் தயாரகிறது. கதை, தமிழ்நாட்டில் நடப்பது போன்று இருக்கும். ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு படமாகிறது. இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. டிசம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்கி, ஒரே கட்டமாக நடத்தி முடித்து, 2019 ஏப்ரல் மாதம் பள்ளி விடுமுறையில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.