ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
இருபது வருடங்களுக்கு முன் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. அதன்பின் ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் குறையவே, கனடாவை சேர்ந்த இந்திரன் பத்மநாபன் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார்.
லான்யா, சாஷா என இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான ரம்பா, தற்போது மூன்றாவது குழந்தையை எதிர்நோக்கி காத்திருக்கிறார். சமீபத்தில் தான் ரம்பாவுக்கு விமரிசையாக வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளார் அவரது கணவர். நெருங்கிய உறவினர்களும் டான்ஸ் மாஸ்டர் கலா உள்ளிட்ட சில நெருங்கிய நண்பர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வின் போது நடிகை ரம்பா, நடனம் ஆடவும் செய்தார்.