14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்ட்ட் அம்மா சரண்யா பொன்வண்ணன். எல்லா படத்திலேயும் அம்மாவாவே நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டும் உண்டு. ஆனால், "நான் அம்மா கேரக்டர்களில் நடித்தாலும் எனக்கென்று வெவ்வேறு குணாதியசங்கள் கொண்ட அம்மா கேரக்டர்களை உருவாக்குகிறார்கள். அதில் எனக்கு மகிழ்ச்சி தான். கடவுளின் அருளாலும் இயக்குனர்களின் கருணையாலும் விதவிதமான அம்மா கேரக்டர்களில் நடிக்கிறேன் என்கிறார்" சரண்யா.
அவர் தற்போது மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படத்திலும் வித்தியாசமான அம்மாவாக நடித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:
இந்தப்படத்துல ஒரு சாதாரண, அன்றாடம் பிரச்சனைகளை சந்திக்கிற, ஏழ்மையான வீட்டு பெண்ணாகத்தான் நடிச்சிருக்கேன். ஆனாலும் என் கேரக்டரை ரொம்ப அழகா வடிவமைச்சிருக்கிறார் இயக்குனர் ராகேஷ். படத்துல நடிக்கும்போதே அந்த வித்தியாசம் தெரிஞ்சது. டப்பிங் பேசும்போது பார்த்தப்ப இன்னும் அசந்து போயிட்டேன். இந்த கேரக்டர் கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம்னு தான் சொல்வேன். என்கிறார் சரண்யா.