ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கமல், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ் நடித்த விஸ்வரூபம் 2 படம் சமீபத்தில் வெளியானது. அல்கொய்தா தீவிரவாதிகளை எதிர்த்து போராடும் இந்திய ராணுவ வீரர்களின் கதை. இதனால் விஸ்வரூபம் படத்தை சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி அகாடமியில் ராணுவ வீரர்களுக்காக திரையிட்டுக் காட்டினார் கமல். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கமலும், பூஜா குமாரும் ராணுவ உடையுடன் வந்தனர். படம் திரையிடலுக்கு பிறகு கமல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்த ராணுவ அகடாமி பயிற்சி நிறுவனத்துக்கும் எனக்கும் 30 வருட தொடர்பு இருக்கிறது. மருதநாயகம் படத்தின் ஆராய்ச்சிக்காக இங்கு வந்திருக்கிறேன். அந்தப் படத்திற்காக குதிரையேற்றம், வாள் பயிற்சியை இந்த வளாகத்தில் பெற்றிருக்கிறேன். நான் எப்போதுமே இந்த வளாத்தின் மாணவனாக என்னை கருதிக் கொள்கிறேன். இங்கிருந்து நான் அதிகமான விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்.
இந்த வளாகத்திற்கு வரும்போது நான் இந்தியன் என்கிற கர்வம் எனக்கு வந்தவிடும். அதைத்தான் விஸ்வரூபம் படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறேன். இந்திய ராணுவத்தில் தென்னிந்தியர்கள் அதிகம் சேர வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் ராணுவத்தில் சேர ஆர்வத்துடன் முன்வரவேண்டும். படித்தவர்கள் வரவேண்டும். அதற்கு ஒரு பாலமாக விஸ்வரூபம் படம் அமையும் என்றால் அது எனக்கு மகிழ்ச்சி.
விஸ்வரூபம் சில மாவட்டங்களில் வெளிவரவில்லை. சிலர் பின்புலமாக இருந்து அந்த வேலையை செய்கிறார்கள். விரைவில் வெளிவராத மாவட்டங்களிலும் வெளிவரும். என்றார் கமல்.