ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 38வது செயற்குழு கூட்டம், சங்கத்திற்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டட வளாகத்தில் நேற்று நடந்தது. சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். பொருளாளர் கார்த்தி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், தி.மு.க., தலைவருமான கருணாநிதியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கேரள வெள்ள நிவாரண நிதிக்கு முதல் கட்டமாக 5 லட்சம் ரூபாய் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. இதுதவிர புதிய கட்டட பணிகள், வரவிருக்கும் நடிகர் சங்கத் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் பூச்சி முருகன், நடிகர்கள் உதயா, நந்தா, ஸ்ரீமன், மனோபாலா, நளினி, லலிதாகுமாரி, குட்டி பத்மினி, பசுபதி, கோவை சரளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.