ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சில மாதங்களுக்கு முன் மக்கள் நீதி மையம் கட்சியைத் தொடங்கிய கமல், அதன்பிறகு மய்யம் விசில் என்ற செயலியை அறிமுகப்படுத்தினார். இந்நிலையில், கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ் நடித்துள்ள விஸ்வரூபம் - 2 படம், தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தியிலும் வெளியாகியுள்ளது.
படத்தில் கமல் செய்த ஒரு விஷயம் சர்ச்சையையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. படம் தொடக்கப்படுவதற்கு முன்னதாக, மக்கள் நீதி மையம் கட்சியைக் கமல்ஹாசன் ஏன் தொடங்கினார் என்பதை விவரிக்கும் விஷயங்களின் தொகுப்பாக ஒரு நியூஸ் ரீல் காண்பிக்கப்படுகிறது.
இதை கமல் ரசிகர்கள் ரசித்தாலும், கமல்ஹாசன் திட்டமிட்டுத் தன்னுடைய கட்சியை நம் மீது திணிக்கிறார் என்ற விமர்சனம் மக்களிடம் எழுந்துள்ளது. இந்த விமர்சனத்துக்கு கமல்ஹாசன் என்ன சொல்கிறார்?
“மக்கள் நீதி மையத்தின் நீயூஸ் ரீல் இனி எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படும் என்பதற்கு முன்னுதாரணமாக விஸ்வரூபம் 2 படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. எங்கு மேடை கிடைத்தாலும், அங்கு பயன்படுத்துவேன். ஆனால், திரைக்கதையில் அதைத் தொடர்புபடுத்த மாட்டேன். படத்தின் கதையிலும் என் கட்சியை கலக்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.
விஸ்வரூபம்- 2 படம் தொடங்கப்படுவதற்கு முன்னதாக திரையிடப்படும் மக்கள் நீதி மையம் கட்சியின் நியூஸ் ரீல் அவரது கட்சி தொண்டர்களுக்கு மகிழ்ச்சியையும், சராசரி ரசிகர்களுக்கு எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.