சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
மோகன் இயக்கத்தில் மாரி படத்தில் நடித்த தனுஷ், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து முடித்து விட்டார். இந்த படத்தில் அவருடன் சாய் பல்லவி, வரலட்சுமி, டோவினோ தாமஸ், ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
வடசென்னை படத்தில் நடித்து வந்தபோது இந்த படத்தில் நடிக்கத் தொடங்கிய தனுஷ், சில மாதங்களிலேயே இந்த படத்தில் வேகமாக நடித்து முடித்து விட்டார். நேற்றோடு இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.
இதையடுத்து, மாரி படத்தின் கதையும், கேரக்டரும் தன்னை மிகவும் கவர்ந்திருப்பதாக தெரிவித்துள்ள தனுஷ், மீண்டும் மாரி வேடத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக இணையத்தில் தெரிவித்துள்ளார்.
ஆக, இன்னும் ஓரிரு ஆண்டு இடைவெளிக்குப்பிறகு மாரி படத்தின் மூன்றாம் பாகத்தில் தனுஷ் நடிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.