ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
காற்று வெளியிடை படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கதில் உருவாகி வரும் படம் செக்கச் சிவந்த வானம். அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ ராஜ் என ஒரு நட்சத்திர கூட்டமே நடிக்கிறார்கள்.
மல்டி ஹீரோ, ஹீரோயின் படமாக ஒரு சமூக பிரச்னையை மையமாக வைத்து ஆக்ஷ்ன் படமாக உருவாகி உள்ளது. ரஹ்மான் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவை கவனித்துள்ளார். மணிரத்னமும், லைகாவும் இணைந்து தயாரித்துள்ளது.
கடந்த பிப்ரவரில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு ஜூன் மாதம் நிறைவடைந்தது. தற்போது எடிட்டிங், இசை கோர்ப்பு உள்ளிட்ட மற்ற பணிகள் நடக்கின்றன. இந்நிலையில் வருகிற செப்., 28-ம் தேதி, செக்கச் சிவந்த வானம் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.