ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'பிச்சைக்காரன்' படத்தை தொடர்ந்து ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு 'இரட்டைக்கொம்பு' என்ற ஒரு படத்தை இயக்குவதாக இருந்தார் சசி. கதை விவாதம் நடந்து கொண்டிருந்த நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் அந்தப்படத்தை டிராப் பண்ணியது.
அதனால் இப்போது வேறு ஒரு தயாரிப்பாளருக்கு அந்தப் படத்தை இயக்குகிறார் சசி. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், சித்தார்த் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இருவரும் மாமன் மச்சானாக நடிக்கின்றனர்.
சித்தார்த் டிராபிக் கான்ஸ்டபிளாகவும், ஜி.வி.பிரகாஷ்குமார் பைக் ரேசராகவும் நடிக்கின்றனர். கிழக்குச் சீமையிலே, பாசமலர் பாணியில் பக்காவான பேமிலி டிராமாவாக எடுக்க திட்டமிட்டுள்ளார் சசி.
இவர், விஜய் ஆண்டனியை வைத்து இயக்கிய பிச்சைக்காரன் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், இந்தப்படத்துக்கும் தெலுங்கில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.