ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி, தனக்கு படவாய்ப்பு கொடுப்பதாக சொல்லி தன்னை பாலியல் தேவைக்கு பயன்படுத்திக் கொண்டவர்களைப் பற்றி தொடர்ந்து பொதுவெளியில் அம்பலப்படுத்தி வருகிறார்.
தெலுங்குத் திரையுலகத்தை கலங்கடித்த ஸ்ரீரெட்டி, கடந்த சில வாரங்களாக தமிழ்த் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களைப் பற்றியும் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்து வருகிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி, ராகவேந்திரா லாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த் என தமிழ்த் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களைப்பற்றி பாலியல் புகார் தெரிவித்தார் ஸ்ரீரெட்டி.
அவரது புகார் குறித்து சுந்தர்.சி, ராகவேந்திரா லாரன்ஸ் இருவரும் மறுப்பு தெரிவித்தனர். ஆனால் ஏ.ஆர்.முருகதாஸ், ஸ்ரீகாந்த் இதுவரை கருத்து கூறாமலே அமைதி காத்து வருகிறார்.
இந்நிலையில், #TamilLeaks coming this week wait for it....
Friday - 10 pm.
Saturday - 11 pm.
Sunday -12 am.
என்று டுவிட்டரில் ஸ்ரீரெட்டி அறிவித்திருப்பதாக ஒரு தகவல் பரவி படத்துறையை பதறவைத்தது. இந்நிலையில் ஸ்ரீரெட்டிக்கு டுவிட்டரில் கணக்கு இல்லை என்றும், யாரோ ஸ்ரீரெட்டி பெயரில் போலியான கணக்கை தொடங்கி மிரட்டியுள்ளனர் என்ற தகவல் தெரிய வந்ததும் நிம்மதியடைந்துள்ளனர்.