சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக கே.பாக்யராஜ் இருக்கிறார். முன்னாள் தலைவர் விசு சங்கத்தின் டிரஸ்டில் முறைகேடு செய்திருப்பதாக பாக்யராஜ் போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். இதனால் விசு, பாக்யராஜை கடுமையாக விமர்சித்து வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை வெளியிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்து கே.பாக்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் சங்கத்தின் நலன் பொருட்டும், சங்க உறுப்பினர்களின் ஒருமித்த கருத்துக்கு தலைவணங்கியும் நான் கமிஷனரிடம் விசு, பிறைசூடன், மதுமிதா ஆகியோர் மீது புகார் அளித்தேன். அதற்கு விசு, பிறைசூடன் ஆகியோர் செல்போனில் குரல்பதிவு மற்றும் பத்திரிக்கை அறிக்கை என என் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர். விசுவின் உடல்நலம் கருதி நான் மவுனம் சாதித்தேன். உங்கள் மவுனத்தால் உங்கள் மீதான குற்றச்சாட்டு உண்மை ஆகிவிடும் என்று பலரும் அச்சுறுத்தி, அறிவுறுத்தியதால் எனது விளக்கத்தை பதிவு செய்கிறேன்.
விசு அவர்களே, உங்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பது குறித்து நான் உள்பட லட்சக்கணக்கானோர் வருத்தம் அடைந்துள்ளோம், "பாக்யராஜ் உங்கள் மனிதாபிமானம் செத்து விட்டதா?" என்று என்னை பார்த்து நீங்கள் கேள்வி எழுப்பினாலும் உங்களுக்கு சிலவற்றை நினைவூட்ட விரும்புகிறேன்.
சங்கத்தின் டிரஸ்டில் புதிய தலைவர், செயலாளரை இணைத்து கொண்டு பணியாற்ற வேண்டும் என்று தான் கேட்டோம். யார் மீதும் குற்றச்சாட்டு வைக்கவில்லை. ஆனால் "உடல் நலமில்லை விலகி கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு இப்போது உடல்நலத்தையும் மீறி இவ்வளவு ஆவேசப்படுகிறீர்களே ஏன்?
நாங்கள் நினைத்துகூட பார்க்காத ஒரு வெளிநாட்டு கலைநிகழ்ச்சியை நீங்களாகவே கற்பனை செய்து கொண்டு அதற்காக டிரஸ்ட் பணம் கேட்கிறார்கள் என்றும் அதனால் தர மறுத்ததாகவும் சொல்கிறீர்களே... இது எவ்வளவு பெரிய கபட நாடகம். கடந்த 2 ஆண்டுகளாக நலிந்தோருக்கு உதவவில்லை. இப்போது பிரச்சினை வந்தபோது அவரச அவசரமாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியிருக்கிறீர்களே ஏன்?.
பிறைசூடன் பொய்யாக கவிதை எழுதுபவர் மட்டுமல்ல... பொய்யாக பேசுபவரும் கூட. டிரஸ்ட்டில் புதிய உறுப்பினர்களை சேர்க்கலாம் என்று கூறிவிட்டு, இப்போது விசுவிற்கு பிடிக்கவில்லை என்று எங்கள் மீது சேற்றை வாரி வீசுகிறார். விசு அவர்களே...
பிறைசூடனுக்காக காவடி எடுத்து உங்கள் பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் அபிப்ராயங்களை மாற்றிக் கொண்டு பெயரைக் காப்பாற்றிக் கொள்ள இன்னும் அவகாசம் இருக்கிறது. நலமுடன் திரும்பி வந்து நட்பினைத் தொடர பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.