ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். குயின் படத்திற்கு தேசிய விருது பெற்றவர். தற்போது ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். "நாட்டுக்கு தேவை என்றால் நானும் அரசியலுக்கு வருவேன்" என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் இளம் வயது வாழ்க்கையை சித்தரிக்கும் சலோ ஜீத் ஹென் என்ற குறும்பட வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட கங்கனா, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் "இந்தப் படம் அழகாக தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைப் பருவத்தில் பிரதமர் மோடி எப்படி உணர்வு பூர்வமானவராக இருந்தார் என்பதை விளக்குகிறது. நாடு வளர்ச்சி அடைய சமூகம் எப்படி இணைந்து செயல்பட வேண்டும் என்பதை விளக்குவதாக இந்தப் படம் அமைந்துள்ளது. .
பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் மோடி. அவர் இந்த இடத்துக்கு உயர்ந்ததற்கு அவரது தாயும், தந்தையும் தான் காரணம். ஜனநாயக நாட்டின் சரியான தலைவர் அவர். நாம் அவருக்கு ஓட்டளித்து பிரதமராக தேர்ந்தெடுத்தோம். அதேநேரம் கடும் உழைப்புக்கு பிறகுதான் அவர் இந்த இடத்தைப் பிடித்துள்ளார். எனவே, அவரது செயல்பாடு மீதான நம்பகத்தன்மை குறித்து எவ்வித சந்தேகமும் இல்லை. ஒரு நாட்டை புதை குழியிலிருந்து மீட்பதற்கு 5 ஆண்டுகள் என்பது மிகவும் குறைவான காலம். எனவே, வரும் 2019 தேர்தலிலும் அவர் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் நாடு முன்னேற முடியும்." என்றார்.
கங்கனாவின் இந்த அரசியல் பேச்சு குறித்து இன்னொரு விழாவில் கலந்து கொண்டவரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த கங்கனா “நம் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும்போது, ராணுவ வீரர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்யவும் தயாராக உள்ளனர். அதேப்போல், என்னுடைய சேவை இந்த நாட்டுக்கு தேவை என்ற சூழல் ஏற்பட்டால், அரசியலில் சேரவும் தயாராக உள்ளேன்” என்றார்.