ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'அடங்காதே', '4G', 'ஐங்கரன்', 'சர்வம் தாளமயம்', '100% காதல்' என அரைடஜன் படங்கள் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வருகின்றன. இவற்றில் சண்முகம் முத்துசுவாமி என்ற அறிமுக இயக்குநர் இயக்கும் 'அடங்காதே' படம் தான் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கிறது.
இந்த படத்தில் சுரபி கதாநாயகியாக நடிக்க, சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகை மந்திரா பேடி, தம்பி ராமையா, யோகி பாபு நடித்திருக்கின்றனர்.
பாகுபலி-2 படத்தை வாங்கி கைமாற்றிவிட்ட விவகாரத்தில் பல கோடியை இழந்த 'ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ்' சரவணன் தற்போது இந்தப்படத்தை முடித்திருக்கிறார். தயாரிப்பாளருடைய கஷ்டத்தை உணர்ந்து கொண்டு, சம்பள பாக்கியைக் கேட்காமல் டப்பிங் பேச ஒப்புக்கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.
இந்த படத்தின் பாடல்களை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமாரே இந்த படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்.