அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
திருமண ஆசை காட்டி, இளைஞர்களிடம் மோசடி செய்த வழக்கில் கைதான நடிகை சுருதி, தனக்கு போலீசார் பாலியல் தொல்லை கொடுத்ததாக, குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை, பாப்பநாயக்கன் பாளையம், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நடிகை சுருதி, 21. ஆடிப் போனா ஆவணி, காசு பணம் துட்டு ஆகிய படங்களில் நடித்தவர். இரண்டு படங்களும் திரைக்கு வரவில்லை. இவர், திருமண ஆசை காட்டி, ஐந்து இளைஞர்களிடம், 1 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக, பிப்ரவரியில் கைது செய்யப்பட்டார்.
மோசடிக்கு உடந்தையாக இருந்த சுருதியின் தாயார், வளர்ப்பு தந்தை, சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஜாமின் கிடைத்ததை தொடர்ந்து, ஐந்து மாதங்களுக்கு பின், 25ம் தேதி, கோவை மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
கோர்ட்டில் நிபந்தனை கையெழுத்திட வந்த சுருதி, அவரது வக்கீல் ஜக்காரியா அலுவலகத்தில், நேற்று அளித்த பேட்டி: திருமண ஆசை காட்டி மோசடி செய்ததாக, போலீசார், என்னை கைது செய்தனர். பொய் புகாரில், என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என்னை கைது செய்த போது, ஏழு நாட்கள், போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது. அப்போது, தனி அறையில், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தனர்.
ஆடையை கழற்றி, நிர்வாணமாக நிற்க வைத்து, போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர், மொபைல் போனில் போட்டோ எடுத்தார். இரண்டு பெண் இன்ஸ்பெக்டர்களும், என்னை தகாத வார்த்தையால் திட்டியதோடு, போலீஸ் அதிகாரியுடன், இரண்டு நாட்கள் அட்ஜஸ்ட் செய்யுமாறு கட்டாயப்படுத்தினர். இணக்கமாக இருந்தால், வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்து விடுவோம் என, போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். அதற்கு சம்மதிக்க மறுத்ததால், என்னை மிரட்டினர்.
இது பற்றி வெளியே சொன்னால், வாழ்க்கையை சீரழித்து விடுவோம் என்றனர். கஸ்டடி முடிந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்திய போது, மாஜிஸ்திரேட்டிடம் பாலியல் சித்ரவதை குறித்து புகார் அளித்தேன். பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து, மனித உரிமை கமிஷனுக்கு புகார் அளிக்க உள்ளேன்.
இவ்வாறு சுருதி கூறினார்.
பேட்டியின் போது, அவரது தாய் மற்றும் சகோதரர், வக்கீல் ஜக்காரியா உடன் இருந்தனர்.