மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'என்.ஜி.கே' படத்தின் படப்பிடிப்பு சென்னை, பொள்ளாச்சியில் நடைபெற்றது. சூர்யா உடன் படத்தின் நாயகிகளான ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி கலந்து கொண்டனர்.
படப்பிடிப்புக்கு இடையே, செல்வராகவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.
இதனால், 'என்.ஜி.கே' படம் தீபாவளிக்கு வெளியாகாது என்றும் டிசம்பரில் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், “வணக்கம் நண்பர்களே. இது சிறிய மருத்துவ பரிசோதனை தான். நான் மிகவும் நலமாக இருக்கிறேன். எனது வேலையைத் தொடங்கிவிட்டேன். என்.ஜி.கே படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்குகிறது. உங்கள் அனைவரது அன்புக்கும், அக்கறைக்கும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இயக்குநர் செல்வராகவன் தனது உடல்நிலை குறித்த வதந்திக்கு ட்விட்டரில் விளக்கம் அளித்திருந்தார்.
இயக்குநர் செல்வராகவன் தன்னுடைய உடல்நிலைகுறித்து விளக்கம் அளித்துவிட்டாலும், 'என்.ஜி.கே' படம் தீபாவளி வெளியீடாக வெளிவராது என்பதற்கான விளக்கம் வெளியாகவில்லை.
சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகிவிட்டதால் 'என்.ஜி.கே' படத்தை தள்ளி வைக்க தயாரிப்பு தரப்பு தீர்மானித்துவிட்டது என்றும், அதற்கான முன்னோட்டம்தான் செல்வராகவனின் உடல்நிலை குறித்து வெளியான செய்தி என்கிறார்கள் படத்துறையினர்.