ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'சேது' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. அந்தப் படத்தில் நடித்ததன் மூலம் மறுவாழ்வு பெற்றவர் நடிகர் விக்ரம். அதன் பின் இருவரும் இணைந்த 'பிதாமகன்' படம் விக்ரமுக்கு தேசிய விருதையும் வாங்கித் தந்தது. தனக்கு பெரிய திருப்புமுனையைத் தந்த பாலா தான், தன் மகன் துருவ் அறிமுகமாகும் படத்தை இயக்க வேண்டும் என விக்ரம் விரும்பினார். அதன்படி துருவ் கதாநாயகனாக அறிமுகமாகும் 'வர்மா' படத்தை பாலா தற்போது இயக்கி வருகிறார். இந்தப் படம் தெலுங்கில் வெற்றி பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்தப் படத்திற்கு யாரை இசையமைப்பாளராக போட வேண்டும் என்பது குறித்து படம் ஆரம்பமான நாளிலிருந்தே ஒரு சர்ச்சை இருந்து வந்தது. பாலா தரப்பில் இளையராஜா அல்லது யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டதாகவும், ஆனால், விக்ரம் அதை விரும்பவில்லை என்றும் கோலிவுட்டில் பேச்சு இருந்தது.
இப்போது 'அர்ஜுன் ரெட்டி' படத்திற்கு இசையமைத்த ரதன், 'வர்மா' படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இளையராஜா, யுவன் இருவரும் இல்லாமல் ரதன் இசையமைக்க ஒப்பந்தம் ஆனதற்கு விக்ரம் விருப்பமே காரணம் என்கிறார்கள். அதே சமயம், விக்ரம் சொல்வதை பாலா கேட்கவே வாய்ப்பில்லை என்றும் சொல்கிறார்கள். ஒரு புதிய சர்ச்சை ஆரம்பமாகிவிட்டது.