ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தமிழ்த் திரையுலகத்தில் எப்போதுமே ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய சீனியர் நடிகர்களுக்கு தனி இடம் உண்டு. விஜய், அஜித் இருவரும் கடந்த 20 வருடங்களாக அந்த சீனியர் நடிகர்களுக்கு அடுத்த இடத்தில் உள்ளனர். மேலே குறிப்பிட்ட அந்த நால்வருக்குப் பிறகான இடங்களில் சூர்யா, விக்ரம், கார்த்தி, தனுஷ், சிம்பு சிவகார்த்திகேயன் ஆகியோர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்குமே தனித் தனியாக குறிப்பிடத்தக்க அளவிற்கு ரசிகர்கள் இருப்பதால்தான் டாப் 10 நடிர்களுக்குள்ளான பட்டியலில் இருக்கிறார்கள்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருமே தீவிர அரசியலில் இறங்கிவிட்டால் அவர்களுக்கான இடம் கொஞ்சம் கொஞ்சமாக விஜய், அஜித்தைச் சென்று சேரும். அதனால், மற்ற டாப் 10 நடிகர்களுக்குள் கடும் போட்டி ஏற்படும். அவர்களுடைய படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு, வசூல் ஆகியவற்றைப் பொறுத்துத்தான் அவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற வேண்டிய சூழல் உள்ளது. அது, அவர்களுக்குள் கடுமையான போட்டியை ஏற்படுத்தி வருகிறது.
கார்த்தி நடித்து கடைசியாக வெளிவந்த 'தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம்' ஆகிய இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. இதனால், கார்த்தி அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார். எந்தக் கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடிக்கிறார் என்ற பெயரும் கார்த்திக்குக் கிடைத்துள்ளது. எனவே, இனி நடிக்க உள்ள படங்களிலும் தனி கவனம் செலுத்தினால் கார்த்திக்கு தனி அந்தஸ்துடன் ஒரு இடத்தை ரசிகர்கள் ஏற்படுத்திக் கொடுத்துவிடுவார்கள். அதைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியது கார்த்தி கையில்தான் உள்ளது.