கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
தமிழ்த் திரையுலகத்தில் எப்போதுமே ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய சீனியர் நடிகர்களுக்கு தனி இடம் உண்டு. விஜய், அஜித் இருவரும் கடந்த 20 வருடங்களாக அந்த சீனியர் நடிகர்களுக்கு அடுத்த இடத்தில் உள்ளனர். மேலே குறிப்பிட்ட அந்த நால்வருக்குப் பிறகான இடங்களில் சூர்யா, விக்ரம், கார்த்தி, தனுஷ், சிம்பு சிவகார்த்திகேயன் ஆகியோர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்குமே தனித் தனியாக குறிப்பிடத்தக்க அளவிற்கு ரசிகர்கள் இருப்பதால்தான் டாப் 10 நடிர்களுக்குள்ளான பட்டியலில் இருக்கிறார்கள்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருமே தீவிர அரசியலில் இறங்கிவிட்டால் அவர்களுக்கான இடம் கொஞ்சம் கொஞ்சமாக விஜய், அஜித்தைச் சென்று சேரும். அதனால், மற்ற டாப் 10 நடிகர்களுக்குள் கடும் போட்டி ஏற்படும். அவர்களுடைய படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு, வசூல் ஆகியவற்றைப் பொறுத்துத்தான் அவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற வேண்டிய சூழல் உள்ளது. அது, அவர்களுக்குள் கடுமையான போட்டியை ஏற்படுத்தி வருகிறது.
கார்த்தி நடித்து கடைசியாக வெளிவந்த 'தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம்' ஆகிய இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. இதனால், கார்த்தி அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார். எந்தக் கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடிக்கிறார் என்ற பெயரும் கார்த்திக்குக் கிடைத்துள்ளது. எனவே, இனி நடிக்க உள்ள படங்களிலும் தனி கவனம் செலுத்தினால் கார்த்திக்கு தனி அந்தஸ்துடன் ஒரு இடத்தை ரசிகர்கள் ஏற்படுத்திக் கொடுத்துவிடுவார்கள். அதைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியது கார்த்தி கையில்தான் உள்ளது.