மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா, ஆத்மிகா, இந்திரஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நரகாசூரன்'. இப்படத்தின் தயாரிப்பாளரான கவுதம் வாசுதேவ் மேனன் 'நரகாசூரன்' படத்தின் பெயரில் பல இடங்களில் பைனான்ஸ் வாங்கிவிட்டு அந்த தொகையை படத்துக்கு செலவு செய்யாததால் சிக்கல் எழுந்தது.
இதன் காரணமாக கவுதம் வாசுதேவ் மேனன் - கார்த்திக் நரேன் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனால் 'நரகாசூரன்' படத்தின் டப்பிங் பணிகள் பாதிக்கப்பட்டன.
ஹீரோ அரவிந்த்சாமி சம்பள பாக்கியை செட்டில் பண்ணாமல் டப்பிங் பேச மாட்டேன் என்று மறுத்துவிட்டார். தற்போது பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, சமீபத்தில் நரகாசூரன் படத்தை தணிக்கைக்கு அனுப்பி வைத்தனர். படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்திருக்கிறது.
இதை அறிவிக்கும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் நரகாசூரன் படத்தின் போஸ்டரை வெளியிட்டார் இயக்குநர் கார்த்திக் நரேன். அப்போஸ்டரில் தயாரிப்பாளரான கவுதம் வாசுதேவ் மேனனின் பெயர் இல்லை.
அதன் அர்த்தம்?
நரகாசூரன் படத்திலிருந்து கௌதம் வாசுதேவ் மேனன் விலகி கொண்டுவிட்டார். இதன் மூலம் அந்தப்படத்திற்கான தடை நீங்கிவிட்டது. அதே நேரம், நரகாசூரன் படத்தின் பெயரில் வாங்கிய அவர் வாங்கிய பைனான்ஸ் விவகாரங்கள் ரிலீஸ் நேரத்தில் தடையாக நிற்கும் என்கின்றனர் படத்துறையினர்.