ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள '2.0' நவம்பர் 29-ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பபட்டிருக்கிறது. இதற்கிடையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் டார்ஜிலிங்கில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படம் 2019 பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகினது.
ரஜினி அரசியல் கட்சி தொடங்கவிருப்பதால் சட்டசபை தேர்தலுக்கு முன் 3 படங்களில் நடிக்க இருக்கிறார், அவற்றில் ஒன்று கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படம் என்றும், சமீபத்தில் கே.எஸ்.ரவிகுமார் ரஜினியை சந்தித்து பேசினார் என்றும், இருவரும் இணைந்து மீண்டும் ஒரு படம் பண்ண முடிவெடுத்திருக்கிறார்கள் என்றும் தகவல் வெளியானது.
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் 'முத்து', 'படையப்பா', 'லிங்கா' ஆகிய படங்களில் ஏற்கெனவே நடித்துள்ளார் ரஜினி. 'முத்து', 'படையப்பா' மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. ஆனால் லிங்கா படுதோல்வியடைந்தது.
இந்நிலையில் இதுகுறித்து கே.எஸ்.ரவிகுமாரிடம் கேட்டால், அப்படியொரு திட்டமே இல்லை... யாரோ கிளப்பிவிட்ட வதந்தி என்கிறார்.