கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
துருவங்கள் பதினாறு படம் மூலம் கவனம் ஈர்த்த இளம் இயக்குநர் கார்த்திக் நரேன். இவர் இயக்கி உள்ள படம் நரகாசூரன். அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன் ஆத்மிகா, இந்திரஜித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை கவுதம் மேனனும், பத்ரி கஸ்தூரியும் இணைந்து தயாரித்தனர். படம் முடிந்து நீண்ட நாட்களாகியும் பைனான்ஸ் பிரச்னை காரணமாக கிடப்பில் இருந்தது. இதுதொடர்பாக கவுதம் மேனன் - கார்த்திக் நரேன் இடையே கருத்து மோதல் கூட ஏற்பட்டது. இதனால் டப்பிங் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.
இப்படத்திற்கு, தணிக்கை குழுவினர் எந்த கட்டும் கொடுக்காமல் யு/ஏ சான்று கொடுத்திருப்பதாகவும், 1 மணிநேரம் 50 நிமிடங்கள் படம் ஓடும் என்றும், விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும், டிரைலரும் விரைவில் ரிலீஸாகும் என கார்த்திக் நரேன் டுவிட்டரில் தெரிவித்து ஒரு போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்.
மேலும் அந்த போஸ்டரில் கவுதம் மேனனின் தயாரிப்பு பேனர் மற்றும் அவரது பெயர் இடம் பெறவில்லை. இதனால் கவுதம் மேனன் இப்படத்தில் இருந்து விலகி உள்ளதாக தெரிகிறது.