ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
2010ம் ஆண்டு தமிழ்ப்படம் வெளியானது. அதையடுத்து 8 ஆண்டுகள் கழித்து கடந்த வாரம் தமிழ்ப்படம் படத்தின் இரண்டாவது பாகம் வெளியானது. படம் திரைக்கு வருவதற்கு முன்பே ஏகப்பட்ட பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
படம் திரைக்கு வந்தபோது முதல் பாகத்தைப்போன்று இல்லை என்கிற விமர்சனங்கள் வந்தபோதும், வசூல் ஓரளவுக்கு சிறப்பாக உள்ளன.
இந்த நிலையில், தமிழ்ப்படம் படத்தின் இரண்டாவது பாகமும் வெற்றி பெற்றிருப்பதால், மூன்றாம் பாகம் உருவாகுமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. இதையடுத்து டைரக்டர் சி.எஸ்.அமுதன் அளித்துள்ள ஒரு பேட்டியில், தமிழ்ப்படம்-2 எடுப்போம் என்று சிவா சொன்னதினால் தான் இது சாத்தியமானது. அதனால் அவர் தமிழ்ப்படம் 3-யில் நடிக்க விரும்பினால் தமிழ்ப்படம்-3 உருவாக வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.