ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்திய நடிகர் சங்கத்தை தற்போது நாசர், மற்றும் விஷால் தலைமையிலான அணியினர் நிர்வகித்து வருகிறார்கள். 2015ம் ஆண்டு பொறுப்புக்கு வந்த இவர்களின் பதவிக்காலம் முடிவுக்கு வர வருகிறது. இதனால் விரைவில் தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தலுக்கு பொதுக்குழு ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக நடிகர் சங்கத்தின் பொதுக்குழு அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 19ந் தேதி கூடுகிறது. இதற்கான கடிதம் உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
நடிகர் சங்கத்தின் கட்டட பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முழுவீச்சில் நடந்து வருகின்றன. நடிகர் சங்க கட்டடத்தை கட்டிமுடித்து அதில் கட்டப்படும் திருமண மண்டபத்தில் தான் என் திருமணம் நடக்கும் என்று செயலாளர் விஷால் அறிவித்துள்ளார். கட்டட பணிகள் வருகிற செப்டம்பர் மாதம் முடியும் என்று தெரிகிறது. இதனால் விஷால் மீண்டும் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார்.