சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
அறிமுக இயக்குனர் சாய்சேகர் இயக்கும் படத்தில் சித்தார்த், கேத்ரின் தெரெசா இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தில் சித்தார்த்துடன் வில்லனாக அஜித்தின் 'வேதாளம்' மற்றும் விஜய் சேதுபதியின் 'றெக்க' படங்களில் வில்லனாக நடித்த கபீர் சிங் நடிக்கிறார். இப்போது இவர்களுடன் சதீஷ், மதுசூதனராவ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. படப்பிடிப்பு துவங்கும் வரை என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்ற டென்ஷனிலேயே படக்குழுவினர் இருந்துள்ளனர்.
இப்படத்தின் நாயகனான சித்தார்த் ஜிகர்தண்டா படத்தில் நடித்தபோது அப்படத்தின் தயாரிப்பாளர் கதிரேசனுக்கும் அவருக்கும் ஏதோ கொடுக்கல் வாங்கல் பஞ்சாயத்து உள்ளது.
அது இன்னும் தீராததினால் சித்தார்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை தொடங்க கவுன்சில் செகரட்டரியான கதிரேசன் ஒப்புதல் அளிக்கவில்லை என தெரிகிறது. அதனால் டென்ஷனான தயாரிப்பாளர் அவசர அவசரமாக பிலிம் சேம்பரில் உறுப்பினராகி அவர்களின் ஒப்புதல் கடிதத்தை பெப்சியில் கொடுத்து படப்பிடிப்பை தொடங்கினார்.
ஆனாலும் கவுன்சில் ஒப்புதல் கொடுக்காததினால் எந்நேரத்திலும் படப்பிடிப்பு நிறுத்தப்படலாம் என்ற டென்ஷனிலேயே முதல்நாள் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். இது தொடர்பாக கவுன்சில் செகரட்டரி கதிரேசன் மீது விஷாலிடம் புகார் கொடுத்துள்ளார் சித்தார்த்.