ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பட வாய்ப்புக்காக நடிகைகளுக்கு நிகழும் பாலியல் தொல்லைகள் குறித்து பட்டியலிட்டு வரும் நடிகை ஸ்ரீரெட்டி, தெலுங்கு சினிமாவை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் பிரபலங்களின் பெயர்களை பட்டியலிட்டு வருகிறார். முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோரை தொடர்ந்து இயக்குநர் சுந்தர் சி- பெயரையும் வெளியிட்டிருக்கிறார் ஸ்ரீரெட்டி.
அரண்மனை படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்த போது, அதன் நிர்வாக தயாரிப்பாளரான கணேஷ் போன் செய்தார். படப்பிடிப்பில் சுந்தர் சி-யை அறிமுகம் செய்து வைத்தார். ஏற்கனவே பேஸ்புக் மூலம் எனக்கு அறிமுகமான நண்பர், ஒளிப்பதிவாளர் செந்தில் குமாரையும் சந்தித்தேன். நிச்சயம் பட வாய்ப்பு தருகிறேன் என வாக்குறுதி அளித்தார்.
மறுநாள் போன் செய்து நோவோடெல் ஹோட்டலுக்கு வர சொன்னார். பட வாய்ப்பு வேண்டுமென்றால் கணேஷ் மற்றும் சுந்தர் சி உடன் பாலியல் சமரம் செய்து கொள்ள வேண்டும் என்றனர். அதன்பிறகு நடந்தது பெருமாளுக்கு தெரியும். கணேஷ் ஒரு மோசடிக்காரர், எனக்கு உதவவில்லை என பேஸ்புக்கில் தெரிவித்திருக்கிறார் ஸ்ரீரெட்டி.
ஸ்ரீரெட்டியின் இந்த குற்றச்சாட்டை சுந்தர் சி மறுத்துள்ளார். அதோடு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் வழக்கு தொடர்வேன் என சுந்தர் சி கூறியுள்ளார்.
சென்னை வருகிறார் : இதனிடையே தன்னை ஏமாற்றிய நடிகர்கள் பற்றி புகார் அளிக்க சென்னை வர இருப்பதாக ஸ்ரீரெட்டி பேஸ்புக்கில் தெரிவித்திருக்கிறார்.