ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்திய அளவில் அதிக பட்ஜெட்டில் தயாரான படங்களின் பட்டியலில் ஷங்கரின் எந்திரன் படம்தான் இருந்தது. ஆனால் அதையடுத்து ராஜமவுலி இயக்கிய பாகுபலி, பாகுபலி-2 ஆகிய படங்கள் அதிக பட்ஜெட்டில் தயாராகின. இந்திய அளவில் அதிகமான வசூலை கொடுத்த பட்டியலிலும் அந்த படங்கள் இடம்பிடித்தன.
இந்த நிலையில், தற்போது ரஜினியை வைத்து ஷங்கர் இயக்கியுள்ள 2.0 படம் பாகுபலி படங்களை விடவும் கூடுதலான பட்ஜட்டில் அதாவது ரூ.450 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகியுள்ளது. இந்த படத்தில் அனிமேஷன் பணிகளே ஒரு வருடமாக நடந்து வரும் நிலையில், நவம்பர் 29-ந்தேதி இப்படம் திரைக்கு வரயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 2.0 படம் எப்போது ரிலீசாகும் என்பதே தெரியாமல் காலதாமதம் ஏற்பட்டு வந்த நேரத்தில், சில விநியோகஸ்தர்கள் தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டனர். அப்போது, தான் ஏற்கனவே அனிமேஷன் செய்து இசை கோர்த்து வைத்திருந்த பத்து நிமிட காட்சிகளை அவர்களுக்கு போட்டுக் காண்பித்துள்ளார் ஷங்கர். அதைப்பார்த்த விநியோகஸ்தர்கள், பணத்தை திருப்பித்தர வேண்டாம் என்று சொன்னதோடு, இந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை செய்யும் என்று கருத்து சொன்னார்களாம்.
பாகுபலி படங்களின் வசூலை முறியடித்து 2.0 முதலிடத்துக்கு முன்னேறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.