ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வளர்ந்து வரும் இளம் நடிகர் பாபிசிம்ஹா. நேரம், பீட்சா, சூதுகவ்வும், ஜிகிர்தண்டா, பாம்பு சட்டை உள்பட பல படங்களில் நடித்துள்ளார். விரைவில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் ரஜினியுடன் நடிக்க இருக்கிறார். பாபி சிம்ஹா நேற்று முன்தினம் இரவு சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள நட்சத்திர ஓட்டல் பாரில் தன் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு போதையில் நண்பருடன் கட்டிப்புரண்டு சண்டை போட்டிருக்கிறார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
நட்சத்திர ஓட்டலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாபிசிம்ஹா தனது நண்பர் உடன் அதே ஓட்டலில் உள்ள பாரில் மது அருந்தியிருக்கிறார். போதை அதிகமானதும் அவரது நண்பர்களில் ஒருவரான கருணா என்பவருடன் படம் சம்பந்தமாக பேசியிருக்கிறார். இதில் வாக்குவாதம் முற்றி திடீரென இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கத் தொடங்கி, கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர்.
பாரில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர். பார் ஊழியர்கள் சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. அவர்களையும் தாக்கி உள்ளார். இதனால் ஓட்டல் நிர்வாகி போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அங்கு சென்று அமைதியாக கலைந்து செல்லாவிட்டால் கைது செய்ய வேண்டியது வரும் என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.