ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகரும் இயக்குனருமான விசு திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்தபோது விசு கல்வி அறக்கட்டளை என்ற ஒன்றை தொடங்கி அதன் மூலம் எழுத்தாளர்களுக்கு பென்சன். மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்கி வந்தார். இந்த டிரஸ்டில் விசு பண முறைகேடு செய்திருப்பதாக நேற்று வாட்ஸ்அப்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதில் அளித்து விசு தனது வாட்ஸ்அப்பில் கூறியிருப்பதாவது:
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுபவன் நான் அல்ல . சொந்த முயற்சியில் எத்தனையோ நற்பணிகளை அரட்டை அரங்கம் மூலமாகவும் மக்கள் அரங்கம் மூலமாகவும் என்னால் செய்ய முடிந்திருக்கிறது என்பதை நாடறியும் . ரத்த சுத்திகரிப்பு நோயுடன் 6 வருடங்களாகப் போராடிக் கொண்டிருக்கும் நான், இன்றைய தேதியிலும், மாணவ மாணவிகளின் படிப்புக்காக விசு எஜுகேஷனல் டிரஸ்ட் மூலம் லஷக்கணக்கில் பணம் நன்கொடை வழங்கி இருக்கிறேன் . என்பதையும், இனியும் வழங்குவேன் என்பதையும், வருமான வரி அலுவலகத்துக்கு நான் சமர்ப்பிக்க இருக்கும் கணக்குப்புத்தகங்கள், ஆவணங்கள் சொல்லும் .
2003ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அந்த டிரஸடுக்கு நான் நிறுவன அறங்காவலர். அன்று முதல், 15 வருடங்களாக விசு எஜுகேஷனல் டிரஸ்டி ல் மாணவ மாணவிகளுக்கு நன்கொடை தவிர, ஒரு நயாபைசா கூட, செலவு வகையில் எழுதப்படவில்லை என்பதையும், அதே கணக்கு புத்தகங்கள், ஆவணங்கள் பறை சாற்றும் . மற்ற செலவு எல்லாமே என் சொந்த செலவு தான் .
எழுத்தாளர் சங்க கட்டிட பத்திரத்தை பணம் கொடுத்து மீட்ட போதும், அதை புதுப்பித்து கட்டிய போதும் பெருமளவில் பணம் உதவி செய்து முதலில் நின்றவன் நான் என்பது பொதுக்குழுவிலேயே உறுதி செய்யப்பட்டது . 10 வருடங்கள் தலைவராக இருந்திருக்கிறேன் .. காலணா கன்வேயன்ஸ் வாங்கியதில்லை . சங்கப்பணத்தில், இந்த ஓட்டலில் சிக்கன் , அந்த ஓட்டலில் மட்டன் என விதவிதமாக டின் கட்டும், பழக்கம் எனக்கு கிடையாது . வீட்டிலிருந்து டிபன் பாக்சில் கொண்டு வருவது தான் என் வழக்கம்.
எழுத்தாளர் டிரஸ்ட் டில் நான் ஒரு சாதாரண டிரஸ்டிதான் . பணத்தை தொடும் அதிகாரம் எனக்கு கிடையாது . டிரஸ்டுக்கு என் பெயர் இருக்கிறது அல்லவா? அதனால் என்னை வம்புக்கு இழுக்கிறார்கள் . பணம் கிட்டத்தட்ட 40 லட்சம் ரூபாய் அரசாங்க வங்கியில் உள்ளது .
குருவி போல் சேர்த்த பணத்தை காக்க, நல்லவர்களிடம் மட்டுமே அதை ஒப்படைக்க, இயலாத வயதிலும் தளராத போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறேன் . சட்டமும் நீதியும், உண்மை நியாயம் பக்கம் தான் இருக்கும் என்ற நம்பிக்கையுடன், என் பெயரை களங்கப்படுத்த முயற்சி செய்ததற்காக நீதித்துறையை நாட இருக்கிறேன் . இதுவே உலவிக்கொண்டிருக்கும் ஒரு வாட்ஸ்அப் அவதூறுக்கு என் பதில் . இவ்வாறு விசு குறிப்பிட்டிருக்கிறார்.