ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர்குளத்தை சேர்ந்த 2 ம் வகுப்பு படிக்கும் மாணவனான யாசின் கடந்த சில நாட்களுக்கு முன், பள்ளிக்கு செல்லும் போது கீழே கிடந்த பையில் ரூ.50,000 பணம் இருப்பதை கண்டான். அதனை தனது ஆசிரியர் மூலம் போலீசில் ஒப்படைத்தான்.
அந்த சிறுவனை நேரில் அழைத்து மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் சிறுவன் யாசினை பாராட்டினார். பிரபலங்கள் பலரும் சிறுவனின் நேர்மையை பாராட்டினர். வறுமையில் வாடும் அவனுக்கு உதவ ரஜினி மன்ற நிர்வாகிகள் யாசினை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் தனக்கு உதவிகள் எதுவும் வேண்டாம் எனவும், தனக்கு ரஜினியை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாகவும் தெரிவித்துள்ளான்.
அந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் ரஜினி, சிறுவன் யாசினை சந்தித்தார். அப்போது யாசினை பாராட்டிய ரஜினி அவனுக்கு தங்க செயினை பரிசாக வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, சிறுவன் யாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன். அவனது படிப்பு செலவை ஏற்கிறேன். அவன் என்ன படிக்க நினைத்தாலும் படிக்க வைப்பேன் என அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய ரஜினி, மற்ற மாநிலங்களை விட தமிழகம் கல்வி வளர்ச்சியில் சிறந்து விளங்குகிறது. பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் லோக்ஆயுக்தா கொண்டு வந்துள்ள வரவேற்கதக்கது. அதிகாரம் உள்ள அமைப்பாக அது செயல்பட வேண்டும்.
லோக்சபா, சட்டசபை தேர்தல் ஒரே நேரத்தில் நடத்துவது நல்ல விஷயம். லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. அந்த நேரத்தில் முடிவு எடுக்கப்படும். 8 வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை. இது போன்ற பசுமை வழிச்சாலை திட்டங்களால் தான் நாடு வளம் பெறும் என்றார்.
ரஜினியை சந்தித்ததன் மூலம் தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியதாகவும், தான் மகிழ்ச்சியில் இருப்பதாகவும் சிறுவன் யாசின் தெரிவித்துள்ளான்.