14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
கேரளத்து பெண் மிருதுளா முரளி. கண்களும் கவிபாடுதே படத்தில் சிறிய கேரக்டரில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு நாகராஜசோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ படத்தில் 3 நாயகிகளில் ஒருவராக நடித்தார். தொடர்ந்து சிக்கிக்கு சிக்கிக்கிச்சு படத்தில் நாயகியாக நடித்தார்.
அழகும், திறமையும் இருந்தும் படங்கள் வெற்றி பெறாததால் வாய்ப்புகள் இல்லை. இதனால் சொந்த மாநிலம் சென்றவர் அங்கு மலையாள படங்களில் நடித்தார். ஆனாலும் தமிழில் தவறவிட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்ற உறுதியோடு இருந்தார்.
தற்போது, ரா ராபுரம், பிஸ்தா, உலகம் விலைக்கு வருது படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் வாய்ப்பு கேட்டுச் செல்லும்போது அவர், மிருதுளாவை சிபாரிசு செய்த படம் மணியக்காரர் குடும்பம். தம்பி ராமய்யா இயக்கி தயரிக்கும் இந்தப் படத்தில் தம்பிராமய்யாவின் மகன் உமாபதிக்கு ஜோடியாக நடிக்கிறார். எந்தொரு பாக்கியம் என்ற மலையாளப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். மீண்டும் சுறுசுறுப்பாகியிருக்கும் மிருதுளாவை மணியக்கரார் குடும்பம் கைதூக்கி விடுமா என்பது படம் வெளிவந்ததும் தெரியும்.