ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன். அவர் பேசியதாவது... மூட நம்பிக்கையை ஓழிக்க அரசியலுக்கு வந்ததாக நினைத்தால் தவறு. ஏழ்மை, ஊழலை ஒழிக்க தான் வந்துள்ளதாக நினைக்கிறேன். அரசியலில் பலரது உதவிகள் தேவைப்படுகின்றன.
ஆழ்வார்பேட்டை ஆண்டவா என தொண்டர்கள் அழைப்பதை நிறுத்த அறிவுறுத்துவேன். சத்துணவு முட்டை விநியோகத்தில் ஊழல் என்று ஓராண்டுக்கு முன்னரே கூறினோம். தமிழக அரசு நிறைவேற்றியுள்ள லோக் ஆயுக்தாவில் நிறைய தண்ணீர் உள்ளது. பால் இல்லை. மக்கள் நீதி மையத்தில் இருக்கும் அனைவரும் கடவுள் மறுப்பாளர்கள் அல்ல. ஒரே நேரத்தில் சட்டசபைக்கும், பார்லிமென்டிற்கும் தேர்தல் நடத்தக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.