ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சூர்யாவின் '2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ்' நிறுவனம் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'கடைக்குட்டி சிங்கம்' படம் நாளை வெளியாகிறது. இந்தப் படத்தையடுத்து சூர்யா- கார்த்தி இருவரையும் வைத்து ஒரு படத்தை பாண்டிராஜ் இயக்கினாலும் ஆச்சர்யமில்லை, இந்த தகவலை கடைக்குட்டி சிங்கம் படத்தின் ஹீரோவான கார்த்தியே சூசகமாக தெரிவித்துள்ளார்.
'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் புரமோஷனுக்காக ஃபேஸ்புக்கில் ரசிகர்களுடன் சமீபத்தில் உரையாடினார் கார்த்தி. அப்போது, 'சூர்யாவுடன் இணைந்து எப்போது நடிக்கப்போகிறீர்கள்?' என ஒரு ரசிகர் கேட்டதற்கு, “அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என எனக்கும் ஆசை இருக்கிறது. எங்கள் இருவருக்காகவும் சேர்த்து பாண்டிராஜ் சார் ஒரு கதை எழுதி, அது நன்றாக அமைந்தால் நிச்சயம் இருவரும் இணைந்து நடிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்ல, “எனக்கே என் அண்ணனை இயக்கும் ஆசை இருக்கிறது. எதிர்காலத்தில் எப்படி அமையப் போகிறது என்பதைப் பார்க்கலாம்” எனத் தெரிவித்துள்ளார் கார்த்தி. ரேக்ளா ரேஸில் வெற்றிபெற்ற கார்த்திக்கு பரிசு கொடுக்கும் சிறப்பு விருந்தினராக கடைக்குட்டி சிங்கம் படத்தில் சூர்யா நடித்துள்ளார்.
சூர்யா - கார்த்தி இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என நீண்ட நாட்களாகவே இருவரின் ரசிகர்களும் ஆசைப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்தப் படம் ஓரளவுக்கு அந்த ஆசையைக் நிறைவேற்றி வைத்துள்ளது.